140203474_8cd8bf871b 

பல்லாயிரம் ஆண்டுகளாய் நன்றாகதான் இருந்தாய் 
ஏனிப்படி ஒரு தவறு செய்தாய் இயற்கைதாயே
ஆறாவது அறிவு படைத்தாய் உன் குழந்தைக்கு
அது படுத்தும் பாடு இப்போது நீ அறிவாய்.

கடைசி குழந்தையாய் மனிதன் நீ படைத்தாய்
சிறப்பாய் இருக்க பகுத்தறிவும் கொடுத்து வைத்தாய்
இன்று உனை அழிக்க உன் குழந்தை விளைய
பெற்றெடுத்த தாயே இப்போ நீ என் செய்வாய்.


மனிதன் காடழித்தான் கைதொழில் புரடசி என்றான்
கரியமில வாயு கொண்டு உன் காற்றுமண்டலம் நிரப்பினான்
தொழில்நுட்ப புரட்சி என்றான் விணவெளிக்கு சென்று வந்தான்
அந்த அறிவு கொண்டே அணுகுண்டும் படைத்து வைத்தான்.

அதிகமாக ஒரு ஆறறிவு நீ கொடுத்தாய்
முன்பிருந்த ஓர் அறிவை மனிதா நீ தொலைத்தாய்
காட்டுமிராண்டி என்று சொல்லி நீ பழிக்கிறாய்
நாட்டுமிராண்டி தனமாய் நீ வாழ்ந்து தொலைக்கிறாய்.

வயிற்று பசிக்கே விலங்குகள் உயிர் கொல்லும்
ஆசைப்பசி கொண்டு உன்னையே நீ கொல்லு
பிணந்தின்னும் விலங்குகள் எத்தனையோ மேல்  மனிதா
மனம் கொன்று தின்று வாழும் மடையா உன்னை விட.

உன் இருப்போ சமநிலையில் இயறகைத்தாயே
அவனிருப்போ உன் நிலையில் அறிவாய் நீயே
பகுத்தறிவு கொண்டு உனை அழிக்கும் மனிதனையே
நீ அழித்து உனை நிலை நிறுத்த முயல்கிறாயே.

இதை அறிந்தும் நாங்கள் இன்னும் திருந்த மாட்டோம்
தாயே உனைப்பற்றி நாங்கள் என்றும் வருந்த மாட்டோம்
செவ்வாயில் வீடு கட்ட திட்டமிடுகிறோம்
இங்கிருக்க எதுவுமின்றி தொலையப்போகிறோம்.

 

இந்த நடை ஒரு கவிதையிருந்து திருடினேன் நன்றாக இருக்கிறது உங்களுக்கு பிடித்திருந்தால் சந்தோசம் அந்த கவிதையை அடுத்த பதிவில் தருகிறேன்.

நன்றி..நன்றி..

இந்த முறையும் என் சிந்தனைகளில் புலவர் புலிகேசிதான் முண்டியடித்துக்கொண்டு முன்னுக்கு நிறகிறார். எனக்கும் ஒரு விருது கொடுத்திருக்கிறார். எல்லோரும் போலவே நானும் ஒரு பொழுது போக்காகவே வலைப்பதிவு எழுதி வருகிறேன். என்னதான் இருந்தாலும் மனதிற்கு அடியில் ஒரு சிறிய பயம் என்ன எழுதி கிழிக்கிறேனோ என்று.  நன்றி நண்பரே…! இதற்கு பிறகாவது உங்கள் விருதின் மரியாதை குறையாதபடி என்னால் முயன்ற அளவு நல்லபடியாக ஏதோ செய்யவேண்டும் என்றிருக்கிறேன் பார்ப்போம்..

பார்த்தேன் ரசித்தேன்..

இந்த மாதம் எனக்கு ஹொலிவூட் மாதம் நிறைய படங்கள் பாரத்தேன் எனக்கு என்னவோ இப்போது  பொழுது போக்கு படங்கள் தான் மிகவும் பிடிக்கும். தமிழ்ப்படங்கள் நணபர்களோடு சேரந்து தியேட்டரில் சென்று பார்த்தால் சரி தவறவிட்டால் அதன் பிறகு தரவிறக்கியோ டிவிடியிலோ பாரப்பது கிடையாது. தனியே இருந்து மொக்கையாவதை தவிர்ப்பதற்காகதான் இந்த முன்எச்சரிக்கை. ஆங்கிலபடங்கள் பாரக்கமுன்பு விக்கிபிடியாவிடம் சாத்திரம் கேட்டுவிட்டுதான் பாரப்பேன்.

அப்படி பாரத்த இரண்டு படங்கள் எனககு மிக மிக பிடித்தபோனது. ஒன்று Body of lies, மற்றையது 3:10 yuma இரண்டிலும் நடித்திருப்பவர்  Russell crowe நீண்ட காலத்திறகு பிறகு பாரத்த மனுசனின் படம் பச்சக் என்று மனதில் ஒட்டிக்கொண்டு விட்டார்.
Body of lies படத்திற்கு மிக மிக பொருத்தமான தலைப்பு பொய்களின் உருவம் வேறொன்றுமில்லை CIA தான் அமெரிக்கர்களே அமெரிக்க உளவு நிறுவனத்தை துகிலுரித்து காட்டியிருக்கிறார்கள். அமெரிக்காவில் ஊடக சுதந்திரம் எந்தளவுக்கு இருக்கிறது எனபதற்கு இந்த படம் நல்ல உதாரணம். இதில் மேலதிகமாக Leonardo DiCaprio வும் சேர்ந்து கொள்ள படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

3:10 yuma அற்புதமான கதை அதற்கு மேலாக Russell crowe வின் நடிப்பு… இதறகு மேல் சொல்ல என்னால் முடியாது. அக்கரைச்சீமை பாலாவோ கருந்தேள் கண்ணாயிரமோ தான் சரி பாரக்காதவர்கள் டிவிடி கிடைத்தாலோ தரவிறக்கியோ பாருங்கள் உங்கள் இரண்டு  மணி நேரத்திறகு நான் பொறுப்பு.

பருத்தித்துறைக்கு ஒரு பயணம்…

அப்பாடா….! 25 வருட காலமாக எனக்கு இருந்த சாபத்தை இன்றைக்கு தான் கழுவினேன் இன்னிக்கு தான் முதன் முதலாக இந்த புண்ணிய பூமிக்கு ஒரு விஜயம் செயதேன். இன்று நாள் வரை மட்டக்களப்பு தவிர இலங்கையின் சுற்றுவட்டாரம் எல்லாம் சுற்றிதிரிந்தவன் பக்கத்திலிருந்த பருத்தித்துறைக்கு போக முடியவில்லை.
வல்லிபுரக்கோவிலுக்கு ஒரு முறை போயிருக்கிறேன் சன்னதி கோவிலுக்கு பல தடவை போயிருக்கிறேன். அதுக்கு அங்கால இன்னிக்கு தான் போக கிடைத்தது.

அதுவும் எனது பைக்கில் ஒரு நணபனுடன் அரட்டையடித்துக்கொண்டே சென்றது நல்ல அனுபவம். ராஜ வீதியூடாக மெல்லிய மழைச்சாரல் வீச 80 km/h வேகத்தில் சர்ர்ர்… ன்னு போகும் வழியில், குப்பைக் கொழும்பில் பேருந்துக்குள் நசுங்கியே வாழும் எம் நணபர்களை நினைக்க அழுவாச்சியா இருந்தது. பல நாட்களுக்கு பிறகு பச்சை பசேல் என்ற வயல் வெளிகள் கண்ணை குளிர் வித்தது. என்ன சுகம்…!


அவை போகும் வழியில் எனது கமெரா போனில் எடுத்த படங்கள் அவ்வளவுக்கு தரமாக இருக்காது வடமராடசி மண்ணையும் வல்லை பாலத்தையும் பல நாள் பாரக்காத உறவுகளுக்காக போட்டிருக்கிறேன் பாருங்கள்.

இரண்டு சிந்தனைகளுமே சிதறியதில் நிறைய இடம் பிடித்துக்கொண்டு விட்டது இன்னும் இருக்கு மிகுதியை அடுத்த முறை சிதறுகிறேன்….

இது எப்பிடி இருக்கு….

இன்னிக்கு உங்களுக்கு நல்ல காலம் கவிதை ஒண்ணும் கைவசம் இல்ல ஆனா என் கமெராவில் சிக்கிய ஒருவரைப்பாருங்கள் எப்படி அப்பாவியாக காட்சி கொடுக்கிறார் ஹி..ஹி.. நானும் இப்பிடி தானுங்க ரொம்ப நல்லவன் இவருடைய உடலைப்போலவே என் மனதும்……

11122009403

வருமுன் காப்போம் என்பது பழமொழி.. ….

நோய்களும் ஏராளமான சமூகப்பிரச்சனைகளும் மலிந்து கிடக்கும் இன்றைய நவீன உலகிலும் இதுவே தாரகமந்திரம். இவற்றை தடுப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு அறிவுரைகள் ஒரு முக்கிய ஆயுதமாக பாவிக்கப்படுகிறது.

மருத்துவத்திலும் எந்த ஒரு நோயையும் வந்த பின் குணப்படுத்துதலிலும் வருமுன் தடுப்பதே சிறந்தது என்ற வகையில் சுகாதாரக்கல்வி என்ற பெயரில் பல வடிவங்களில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக மலேரியா எதிர்ப்பு, கச தடுப்பு, குடும்ப திட்டமிடல்… மேலும் பல..போன்றவற்றை குறிப்பிடலாம். பொருத்தமான முறையில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடுகள் குறிப்பிடத்தக்க அளவு  வெற்றியை கொடுத்திருக்கின்றன.

பெரும்பாலான சமயங்களில் அறிவுரைகள் நல்ல விளைவுகளையே கொடுத்தாலும். சில சந்தரப்பங்களில் இந்த அறிவுரைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்துக்கள் பெரிய சிக்கலை உண்டு பண்ணி விடுகின்றன. உதாரணமாக எனக்கு அறிவுரை கூறியவர்கள் சொல்லிய விடயங்களை உங்களோடு பகிரந்து கொளகிறேன்.

இலங்கையில் தற்கொலைக்கு முயற்சி செய்பவர்கள் தேர்ந்து எடுக்கும் ஒரு முறை அலரி விதையை அரைத்து சாப்பிடுதல். அனேகமாக இளம் பராயத்தினரே அம்மாவுடனோ அப்பாவுடனோ சண்டை பிடித்து விட்டு சும்மா கிடக்கும் அலரிக்கொட்டையை சர்க்கரையுடன் சேரத்து அரைத்து சாப்பிட்டு விடுவார்கள். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் இந்த சின்னஞ்சிறுசுகளின்  உயிரை மீட்க வைத்தியர்கள் பகீரதபிரயத்தனம் மேற்கொள்ள வேண்டி இருக்கும் ஒருவேளை காப்பாற்ற முடியாது போய்விட்டாலோ டாக்குத்தருக்கு தூக்கம் போய்விடும். இது ஒரு பெரும் பிரச்சனையாகிவிட இதைப்பற்றி உள்ளூர்பத்திரிகையில் ஒரு விழிப்புணர்வு கட்டுரை வெளிவந்தது. என்ன கொடுமை என்றால் அந்த கட்டுரை வந்த  பிறகு அலரி விதை சாப்பிட்டு உயிரை விட எத்தனிப்பவர்களின் எண்ணிக்கை முன்னரை விட அதிகரித்ததாம்.
{ பல பேர் டவுட்டில இருந்திருப்பார்கள் இதை சாப்பிட்டால் உயிர் போகுமோ எண்டு கட்டுரை டவுட்டை தெளிவாக்கியிருக்கும் போல்..}

அறிவுரைகளிலேயே மிகவும் ஆபத்து நிறைந்த பகுதி பாலியல் கல்விதான். இதை பாடப்புத்தகங்களில் புகுத்துவது சரியா தவறா என இன்னும் பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கிறது . இப்படி இருக்க ஒரு பினதங்கிய கிராமத்தில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் இன்னோரன்ன பல இடக்குமுடக்கான விடயங்களைப்பற்றி அந்த கிராமத்திலுள்ள இள வயதினருக்கு, (ஏனெனில் இருக்கிற சமுதாயத்தை தான் திருத்த முடியவில்லை   இனி வளரும் சமுதாயத்தை ஆவது திருத்தி எடுப்போம் என்ற நோக்கில்).  ஒரு சுகாதார கல்வி கருத்தரங்கு மேறகொள்ளப்பட்டது. கிடைத்த விளைவு யாரும் எதிர்பார்க்காத ஒன்று அடுத்தடுத்த மாதங்களில் அந்த கிராமத்தில் இளவயது திருமணங்கள்  வேண்டாத கர்ப்பங்கள் என பல வில்லங்கமான விடயங்கள் அதிகரித்திருந்தன. என்னத்தை சொல்ல….. விளங்கினா சரி…..?

kutram1

இவை எல்லாம் ஒரு நல்ல விடயத்தை சொல்லப்போய் எதிர் மறையான விளைவுகளை கொடுத்த சம்பவங்கள். ஆனால் எனக்கு இந்த பதிவு எழுத ஐடியா கொடுத்த விஜய்-TV  செய்த வேலை தெரியுமோ…? குற்றம் நடந்தது என்ன நிகழச்சியில் ஒரு பிரச்சனையை வெளியே கொண்டு வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு ஒரு தப்பான விளம்பரம் செய்திருக்கிறது. இந்தியாவில் அதிகளவில் இளஞ்ஞர்களிடையே பிரபலமாகி இருக்கும் மிக மிக கேவலமான கீழத்தரமான கணினி விளையாட்டு என்று ஒரு கணினி விளையாட்டை பற்றி அ - ஃ வரை அந்த பெரிய மனுசன் கதைத்திருந்தார் ஸ்கிறீன் சொட் கூட காட்டினார் . இத்ததனை காலமும் அது பற்றி தெரியாமல் இருந்த பல இள வட்டங்கள் நிகழச்சியை பார்த்து விட்டு இப்போது கூகிள் ஆண்டவருக்கு விண்ணப்பம் அனுப்பிக்கொண்டிருக்கும் அதை தரவிறக்கி விளையாடிபார்க்க. உண்மையில் இந்த கணினி விளையாட்டை பற்றி கதைத்த விஜய்TV  யின் நோக்கம் என்ன என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய கேளவி.

minority-report-dashboards

ஸ்பீல்பேக்கின் minority report பார்த்திருக்கிறீரகளா அதில் ரொம் குரூஸ் தனது கை அசைவுகளால் ஒரு பெரிய கணினி திரையில் தகவல்களை  கையாண்டிருப்பார். ஸ்பீல்பேக்கினால்  2054 ஆம் ஆண்டில் என சொல்லப்பட்ட ஒரு விடயம் 2009 ஆம் ஆண்டிலேயே சாத்தியமாயிருக்கிறது அதுதான்.

SIXTH SENSE - WEAR ur WORLD [WUW]

sixthsense04


உலகம் முழுவதும் இப்போது இதுதான் பேச்சு. இதை கண்டு பிடித்திருப்பவர் அமெரிக்காவில் உள்ள MIT media lab இன் பட்டதாரி மாணவனும் இந்தியாவை சேரந்தவருமான pranav mistry.

SIXTH SENSE – என்றால் என்ன…?

மனிதன் மெய் வாய் கண் மூக்கு செவி என்ற ஐம்புலன்களை கொண்டே தன்னை சுற்றி உள்ள உலகைப்பற்றி தகவல்களை பெற்றுக்கொண்டு அதற்கேற்ப சரியான செயற்பாட்டை மேற்கொள்கிறான்.  இந்த ஆறாவது புலன் என்ன செய்கிறது என்றால்  நாங்கள் வாழும் சூழலிலேயே  டிஜிட்டல் உலகத்தை பாரக்க வழி செயகிறது. முழு உலகையுமே கணினியாக மாற்றுகிறது.மொனிட்டர் தேவையில்லை Iphone தேவையில்லை எந்த ஒரு தட்டையான மேற்பரப்பும் போதும். விசைப்பலகை தேவையில்லை உங்கள் விரலகளே போதும்.
நீங்கள் நீனைத்த மாத்திரத்தில் உங்கள் விரலசைவுகளில் digital world  விரிந்து கிடக்கும்.

sixthsense02

கழுத்தில் தொங்கவிடப்படும் ஒரு சிறிய வெப் கமெரா. மினி புரஜெக்டர், இரண்டும் காவிச்செல்லக்கூடிய ஒரு கணினி அல்லது ஒரு செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும். மினி புரொஜக்டர் எந்த மேறபரப்பையும் ஒரு interface ஆக மாற்றுகிறது.  மினி கமரா உங்களின் விரல்களின் அசைவுகளையும் நீங்கள் பயனபடுத்தும் மேறபரப்பையும் வீடியோ எடுத்து கணினிக்கு அனுப்புகிறது. கணினியில் உள்ள மெனபொருள் மூலம் எல்லா தகவல்களும் அனலைஸ் செய்யப்பட்டு உங்கள் விரல் அசைவுகளாலேயே புரொஜெக்டரால் காடசிப்படுத்தப்படும் தகவல்களை கையாள வழி செய்கிறது.
இதுக்கு மிஞ்சி என்னால முடியாதப்பா கீழே கொஞ்ச படங்கள் போடுகிறேன் பாருங்கள் .

sixthsense10




நேரம் பாரக்க வேண்டுமா மணிக்கட்டில் ஒரு வட்டம் கீறுங்கள் மணிக்கூடு தயார்…











sixthsense13 




உள்ளங்கையில் ஒரு கைத்தொலைபேசி விசைப்பலகை…












இப்படியும் இனி படம் எடுக்கலாம்..
உங்கள் கைகளுக்குள் ஒரு வேண்டிய காட்சியை அடக்கி ஒரு கிளிக்…

picture-6 picture-7

 sixthsense16



பக்கத்து சுவரில் போட்டு பெரிதாக்கு சிறிதாக்கு அடுத்த கணமே உன் கேர்ள்பிரண்டுக்கு அனுப்பு.









sixthsense09



பத்திரிகை படித்துக்கொண்டே செய்தி சம்பந்தமான வீடியோ காடசியையும் பார்க்கலாம்.











6thsense6


இது எப்படி இருக்கு உங்கள் கம்பனியில் வேலை செய்பவர்களின் தரவுகள் கணினியில் இருக்கா அத்தனையும் அவர் உங்கள் முன் வந்தால் அவர் மேல் இருக்கும்
நோ..பீலா……













இன்னும் எத்தனையோ.. ஒரு புத்தகத்தை எடுத்தால் அதனுடைய ரேட்டிங் முன்மட்டையில் விழும் உள்ளே திறந்தாலலோ புத்தகம் பற்றிய மேலதிக விபரங்கள் வரும்….  விமான நிலையம் செலகிறீரகளா.. போகும் வழியில் ரிக்கெட்டை வெளியில் எடுங்கள் விமானம் தாமதாமா சரியான நேரத்திறகு கிளம்புகிறதா எவ்வளவு நேரம் தாமதம் என ரிக்கெட்டிலேயே தெரியும்…  இப்படி எல்லாமே மஜிக்காகவே இருக்கிறது.

pranav mistry இந்த தொழில் நுடபத்தை open source ஆக அறிவித்து இருக்கிறார். இவருடன் இணைந்து சாம்சங் நிறுவனம் இந்த முழு தொகுதியையும் ஒரு ஸ்மார்ட் போனில் அடக்க கூடியவாறு ஒரு புதிய ஸ்மார்ட்போன் தயாரிக்கவிருக்கிறது. வருங்காலத்தில் உங்கள் சட்டை பட்டனில் இவ்வளவும் இருந்ததாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை முனசீட்டில் தூங்குபவரின் முதுகில் முழுநீள படம் பார்த்தவாறே பயணம் செய்யலாம்.

எனக்கென்னவோ என்ன நடக்குத்துன்னு புரியல்ல ஹொலிவூட் படங்களில் பாரக்கும் விடயங்கள் எல்லாம்  சில பல வருடங்களில் நிஜமாகிவருகிறது.
அப்பிடின்னா 2012 ம் நிஜமாகுமா……?




..



“சிங்கம் ஒன்று புறப்பட்டதே…
   மழைகாலம் தொடங்கிடுச்சு…
      நல்ல நேரம் பிறந்திடுச்சு……”
என்று முணுமுணுத்தபடியே மண்புழு ஒன்று மாரகழி மாதம் பொழிந்து தள்ளிய மாரி மழையால் அரிகண்ட விலாஸ் அலுவா போல பதமாக இருந்த மண்ணுக்குள் தன் நெடிய உடலை நீட்டியும் சுருக்கியும் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது….
சதக்..
முணுமுணுத்த பாடலையும் கூடவே இழுத்து நீட்டிய தன் உடலையும்  சட்டென்று நிறுத்தினார் புழுவானவர்.
அது ஒரு மண்வெட்டி, கொத்திய கொத்தில் மயிரிழையில் தப்பியிருந்த புழுவானவரை அப்படியே மண்ணோடு சேர்த்து புரட்டி வெளியில் போட்டிருந்தது.
புழுவானவர் இப்போது புது உலகத்தில் இருந்தார் …மண்ணுக்கு வெளியே….. ஆபத்து எந்த ரூபத்திலேயும் எங்கிருந்தும் வரலாம்… மணவெட்டியின் அடுத்த கொத்தில் துண்டு துண்டாகப்போகிறாரோ அல்லது எங்காவது பசியுடன் பறந்து திரியும் பறவைகளுக்கு இரையாகப்போகிறாரோ எனபதை புழுவானவர் அறிய மாட்டார்…..
ஊய்……..என்று உடலை ஒரு தடவை சிலிர்த்து விசிலடித்தவருக்கு முன்னால் வியப்பு விரிந்து கிடந்தது.. “அய் நாம எங்கே இருக்கோம்…? இந்த உலகம் ரொம்ப நல்லாருக்கே..! யாரு தலைய இங்க கொணாந்து போட்டான்..?
என்று   மனதுக்குள் ருவீற் பண்ணிக்கொண்டு இருந்த புழுவானவரின் கவனத்தை, இவரது திருவுருவத்திறகு முன்னால் அசைந்த இவரைப்போன்ற ஒரு புழுவின் உருவம்  கலைத்தது.
“அட இது யாரு..?… நம்ம ஆளு ஒண்ணு.. எனக்கு முதலே இங்க ஆஜராகியிருக்கார் … அய் அதுவும் பொண்ணு…. இதப்பார்ரா… இதைதான் ராஜ யோகம்ன்னு சொல்லுவாங்களோ…? என்னையும் அனுப்பி ..எனக்கு பின்னால ஒரு பெண்ணையும் அனுப்பி இருக்காங்க…”
தொடர்ந்து ருவீற் அடித்துக்கொண்டிருந்தார் புழுவானவர்.
……ம்..ம்…
“நேரத்தை வீணாக்காத மச்சி எவனாவது உன்னை முந்திடப்போறான்..”
வினாடி நேரத்தை கூட வீண்டிக்க விரும்பாத புழுவானவர் உடனடியாகவே செயலில் இறங்கினார்..
“ஏய்..ஏய்.. ஐ லவ்யூடி செல்லம்….”
“………………………..”     மறு முனையிலோ மயான அமைதி..
'”ம் .. என்ன இது ஒரு அசுமாத்தத்தையும் காணல ஒரு வேளை ஐட்டத்துக்கு ஆங்கிலம் தெரியாதோ… ஹ..ஹ.. ஹா… நல்ல தமிழில் ஒண்ணு எடுத்து விடுடா சோமாரி…”
சிறிது நேரம் சிந்தித்த புழுவானவர் தனித்தமிழில் எடுத்து இயம்ப தொடங்கினார்……
“என் உயிர் மண்புளுவே…. !
என் அருமை பெண் புழுவே…!
நான் உன்னை காதலிக்கிறேன்..! நீ என்ன சொலகிறாய்..?
நிறுத்தி விட்டு மற்ற புழுவை உற்றுப்பாரத்தார் …..
“………………………..”
இந்த முறையும் அதே அமைதி
நம்ம புழுவானவருக்கு பொறுக்க முடியவில்லை……  கோபம் பொத்துக்கொண்டு வர…. வந்த கடுப்பை வாரத்தைகளில் காட்டினார்….
“கல்யாணந்தான் கட்டிகிட்டு ஊர்ந்து போலாமா…… ஊரந்து போயி கொஞ்ச புழு பெத்துக்கலாமா…”
மறு முனையில் மௌனம் கலைந்தது…
“அடேய் மட்டி முட்டாள் புழுவே…! நான் உன்ர மற்ற பக்கமடா….. மங்குனி பாண்டியா.. பொத்திக்கொண்டிருடா புண்ணாக்கு புழுவே அடுத்த மணவெட்டி கொத்து சிலவேளை உம்மேல தான் விழும் கவனம்…..”
அதிரந்து போன நம்ம புழுவானவர் நம்ப முடியாமல் ஒரு முறை தன் உடலை நன்றாக இழுத்துப்பாரக்க …..


இவ்வளவு நேரமும் இவர் காதல் செயது கொண்டிருந்த அந்த புழுவும் சேரந்து அசைந்தது..


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கதை வந்த காரணம்….


மண் புழுக்களில் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லை . எல்லாம் ஒரே புழுதான் மண் புழுவைப்போலவே மனிதர்களும் இருந்து விட்டால்…
  • காதல் என்ற கறுமம் இந்த உலகத்தில் இருந்திருக்காது.
ஒரு இயற்கையான நிகழ்வு ஒன்றுமே இல்லாத ஓர்மோன்களின் அட்டகாசத்திற்கு  காதல் என்று பெயர் வைத்து மனிதர்கள் செய்யும் லீலைகள் கொஞ்சநஞ்சமல்ல. எது உணமையான காதல் எனபதற்கு ஏதாவது வரைவிலக்கணம் இருக்கிறதா இல்லை. இவ்வுலகில் காதல் என்ற பெயரில் அரங்கேறும் கறுமங்கள் தான்  அதிகம். 
ஒரு பதினெட்டு வயது இளைஞ்ஞனுக்கும் ஒரு பருவ மங்கைக்கும் வருவது காதல் என்றால் ஒரு  நடுத்தர வயது குடும்பஸ்தனுக்கு அடுத்தவன் பொஞ்சாதி மேல் வருவது என்ன..? இரண்டும் ஓர்மோனகளின் திருவிளையாடல்தான் எல்லாமே ஒண்ணுதான். சிம்பு நயனுடன் செய்ததும் காதல் தான் பிரபுதேவா நயனின் மேல் கொண்டதும் காதல்தான்.
காதல் ஒன்று மட்டும் இல்லாதிருந்து விட்டால் உலகத்திறகு இன்னும் எத்தனையோ சாதனையாளர்கள் கிடைத்திருப்பார்கள். காதலிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு செல்லிடப்பேசியை காதுக்குள் வைத்து செல்லும் இடமெல்லாம் பபா..குஞ்சு ..செல்லம்... என்று சிணுங்கி சிணுங்கியே அழிந்து போனவர்கள் பலர். உண்மையாக காதலிக்கிறோம், நாங்கள் லைலா மஜ்னு பரம்பரை என்று சொல்கிற எத்தனை பேர் தனியாக வீதியில் செல்லும் போது தன் காதலியை விட அழகான ஏன் சுமாரான ஒரு பெண்ணை கண்டால் சபலப்படாமல் இருந்திருக்கிறார்கள். கொஞ்சம் மனச்சாடசி, ஒழுக்கம், ரொம்மப பயம், உள்ளவர்கள் பார்வையோடு சரி. மற்றவர்கள் கதை கண்ராவிதான்.
  • பெண்ணடிமை என்ற ஒன்று இருந்திருக்காது.
ஒரு ஆணும் பெண்ணும் உறவு கொண்டால் ஆம்பிளைக்கு ஒண்ணுமே இல்லை  ஆனால் பெண்களின் கதை ஒரு கருவைச்சுமந்து குழந்தையை பெற்றெடுத்து அதறகு பாலூட்டி சீராட்டி வளரத்து எத்தனை வில்லங்கம் பெண்களுக்கு மட்டும். அதுவே தகாத உறவாக இருந்து ஒரு வேண்டாத கரப்பமாக போய்விட்டால் பெணகளின் நிலைமை அதோகதிதான். சட்ட பூரவமான கருக்கலைப்பு தடை செய்யப்பட்டிருக்கும் இலங்கை போன்ற நாடுகளில் பல பெண்களின் வாழக்கை சீரழிக்கப்பட்டு மரணத்தில போய் முடிந்திருக்கிறது. ஆனால் இதறகு காரணமான ஆண்கள் எங்கேயோ இன்னொரு அப்பாவி பெண்ணை கல்யாணம் செயது இன்னும் பல பெணகளின் வாழக்கையை கெடுத்துக்கொண்டு இருப்பார்கள். 
இவ்வாறு பெணகளுக்கு பாலியல் ரீதியாக சமூகத்தில் இருந்த ஆபத்து தான் பெண்ணடிமை என்பது தோன்ற காரணமாக இருந்திருக்கிறது. அதாவது பெண்கள் பாதுகாப்பு என்ற போரவையில் வீட்டிறகுள் ஒடுக்கப்பட்டிருந்தார்கள். 
இப்போது நிலைமை எவ்வளவோ மாறிவிட்டிருந்தாலும் பெணகள் ஏமாற்றப்படுவது ஒரு தொடர் கதையாகவே இருக்கிறது.
ஆக  மண்புழுக்களைப்போல மனிதர்களுக்கும் ஆண் பெண் என்ற வேறுபாடு இல்லாவிட்டால் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது.



இரண்டும் போதும் என்று நினைக்கிறேன் நகைச்சுவையாக ஒரு கதைக்கு பின்னால் தீவிரமாக ஒரு விடயம். இது எனது பார்வை மட்டுமே உங்களின் கருத்துக்களை வரவேறகிறேன் பெணகளுக்கு ஜால்ரா அடிக்கிறேன் என்று ஆண்கள் யாரும் போர்க்கொடி தூக்கி விடாதீரகள். இன்னொரு விடயம் மண்புழு கதைக்குமா பாட்டுபாடுமா ன்னு யாராவது பின்னூட்டம் போட்டிக…… ;-p  இதுதான் பதில் வரும்…






இந்த படத்தில் நீங்கள் பாரப்பது தான் -பழம் வீதி- பழம் ரோடு என்றால் இங்கு  அனைவருக்கும் தெரியும். யாழ்ப்பாணத்தில் நல்லூருக்கு அண்மையாக பலாலி வீதியையும் நல்லூருக்கு செல்லும் அரசடி வீதியையும் இணைக்கும் சிறிய வீதி. ஐந்து மாதங்களுக்கு முனபு என் நணபனின் புகைப்படக்கருவியை சோதிப்பதறகாக சும்மா வீதியில் நின்று எடுத்த படம் எங்கோ கணினியின் ஒரு மூலையில் கிடந்ததை தேடிப்பிடித்து போட்டிருக்கிறேன்.


DSCN0959_thumb2
இதுதான் என்னுடைய ராஜபாட்டை… நம்ம வாசஸ்தலம் இருக்குமிடம். சிறு வயதில் நான் ஓடி விளையாடிய… பட்டம் விட்டு பழகிய.. மைதானம். எனக்கு துவிச்சக்கர வண்டி ஓட்ட கற்று கொடுத்த  ஆசான்…இப்போது இந்த பழம் வீதியின் கதியை பாருங்கள்….


20112009353_thumb4
1991 ஆம் ஆண்டு இறுதியாக புனரமைக்கப்பட்ட பிறகு ஒரு மாதத்திறகு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தது ஒரு சிறிய கிடங்கு கூட இருக்கவில்லை.  இதற்கு பக்கமாக செல்லும் யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிகளில் ஒன்றான பலாலி வீதி மதகு ஒன்று கட்டுவதறகாக மூடப்பட்டு போக்குவரத்து முழுவதும்  பாவம் இந்த பழம் வீதியால் திருப்பி விடப்பட்ட பிறகு தான் பிரச்சனை.  மழையால் ஊறி ஏற்கனவே சொதசொதத்து போய் நல்ல பதமாக இருந்த என் ராஜபாட்டையை, அது இதுவரை கண்டிராத பல கனகரக வாகனங்கள் எல்லாம் சேர்ந்து உழுது தள்ளிவிட்டன……இந்தப்படம் எடுத்து ஒரு வாரம் ஆகிறது இப்போது வீதியின் நிலைமை ….மிகவும் மோசம்…..இதைப்போல மூன்று இடங்களில் பாழாய்ப்போயிருக்கிறது என் பழம் வீதி.


இதனால் வாகனத்தில் செல்வோருக்கு எந்தவித கஸ்டமும் இல்லை என்னைப்போல் உந்துருளியில் , துவிச்சக்கர வண்டியில் செலபவர்களுக்கெல்லாம் சேற்றை வாரி இறைத்துவிட்டு போவார்கள். அதுவும் பரவாயில்லை, நடந்து செலபவர்களின் நிலைமை…? பக்கத்திலிருக்கும் பல பாடசாலைகளுக்கு வெள்ளைச்சீருடையுடன் நடந்து செல்லும் துவிச்சக்கர வண்டியில் செல்லும் சின்னஞ்சிறுசுகளின் கதி…?


நான் கூட பரீடசை என்று அறிவித்த பிறகுதான் பாடப்புத்தகம் தூக்குவேன் அதே போல நம்ம ஊரில் பாருங்கோ மழை வந்த பிறகு தான் யாழ் மாநகர சபை வீதி எல்லாம் திருத்துவானுகள்…மழை வரும்மட்டும் காவலிருப்பானுகள் பலாலி வீதி மதகை நல்ல கோடை வெயில் கொளுத்தி எறியும்போதே திருத்தம் செய்து முடித்திருந்தால் நம்ம ராஜபாட்டை தப்பியிருக்கமோல்லியோ..


என்ன கொடுமை என்றால் இனி இதை எப்போது சீர் செய்வார்கள் எனபதுதான் பலாலி வீதி வேலை முடிந்து திறக்கப்பட்டால் பிறகு பழம் வீதி  அவர்களுக்கு தேவைப்படாது … அப்பிடி யாராவது புண்ணியவான் யாழ் மாநகர சபையிலிருந்து இதை திருத்த நினைத்தாலும் மழை இடம் கொடுக்காது மழை விட்டால் பிறகு நம்ம மா.சபை இதையெல்லாம் மறந்து போய்விடும்… அனேகமாக எனக்கென்னவோ இது 2010 மாரிகாலம் மழை தொடங்க தான் ஏதாவது நடக்கும்..


இதையெல்லாம் உங்களிடம் சொல்லி என்ன நடக்க போகிறது …எல்லாம் ஒரு ஆதங்கம் தான் இத்தனை காலமும் சர்..என்று நான் வண்டியில் ஓடித்திருந்த வீதி இப்படி ஆயிப்போச்சேன்னு தான் கவலை.. ம்..







புலவர் பலிகேசியின் டரியல்…
அகல்விளக்கின் டீ..டைம்….இன்னும் பல ……
எங்களுக்கு ஒண்ணு வேணாமோ…….அட…அதாங்க இது..!
ஓகே…..  --யாராவது இதுக்கு நல்ல தமிழ் சொல்ல முடியுமா--
விடயத்திறகு வருவோம்.

நன்றி…
கடந்த இரண்டு வாரங்களில் நண்பர்கள் என்னை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டார்கள்….

முதலாவதாக….

நண்பனுக்காக பதிவெழுதிய அக்கரைச்சீமை ஹொலிவூட் பாலா. அவருடன், அடிக்கடி குஜாலாக கும்மியடித்துக்கொண்டிருந்த யாழ் நணபர் ஒருவர் திடீரென மாயமாகிவிட அவரை தேடி பாலா எழுதிய பதிவு நெஞ்சை நெகிழ வைத்துவிட்டது. இறுதியில் பின்னூட்டங்களிலேயே நணபரும் கிடைத்து விட்டார். அவரது நடபு மேன்மேலும் தொடர வாழத்துக்கள்.

அடுத்தவர்..
அனபர் நான் சும்மா கிறுக்கி தள்ளிய கவிதைகளுக்கு தன்னுடய டரியலில் இடம் ஒன்று கொடுத்து என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். பலன் எனக்கு பல புதிய நணபர்கள் கிடைத்தாரகள்.  முக்கியமாக கலகலப்பிரியா இவரது பதிவுகள் என்னை ரொம்பவும் பாதித்தது.    உணமைகளை உச்சி மண்டையில் ஆணி   போல் அறைந்து விடுகிறது.

நடபுக்காக பதிவெழுதி நெகிழ வைத்த பாலா ….
புதிய நணபர்களை கொடுத்த புலவர்….
இருவருக்கும்….
combo2
கூகிளாண்டவர் தயவில் எனது அனபுப்பரிசு…
உதிர்ந்த பூக்கள்…
22112009355

இந்த பூக்களை தெரியுமா……இந்த பூமரம்  ஈழத்தின் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில் வாசனை வீசிக்கொண்டிருந்தது ….இப்பொழுதும் இருக்கும் என நம்புவோம்….இது என்ன பூ…? அந்த இடம் எது..?
அனேகமாக பின்னூட்டத்தில் விடைவரும்..
நல்ல பாட்டு கேட்டு…
ஏ.ஆர்.ரகுமான் ஹொலிவூட்டுக்கு போட்டார்…..விண்ணைத்தாண்டி வருவாயோ மாரகழி தான் வெளியாகிறது. ஹரிஸ் ஜெயராஜின் அடுத்த படம் என்னன்னு யாருக்கும் தெரியாது. யுவன் வர வர பாடல்கள் முனபோல் இல்லை வேற யாருடைய பாடல்களும் நம்பி தரவிறக்கம் செய்வது இல்லை. நல்ல பாட்டு கேட்டு ரொம்ப நாள ஆச்சு ….யாராவது ஏதாவது நல்ல பாட்டு கேட்டிருந்தால் சொல்லுங்கப்பா…இந்தி பாட்டுன்னாலும் பரவாயில்லை…யாம் மொழி கடந்த இசையை ரசிப்பவர்கள் ஸ்பானிஷ் பாட்டுன்னாலும் கேடப்போம்…
இது எப்பிடி இருக்கு…
இந்த வாரம் என்னவோ தெரியாது…..
பதிவை எழுதி முடிக்கும் போது உங்களுக்கு கஸ்டகாலம்.


பிரிவு....


bigstockphoto_Couple_In_Love_73114
உனைப்பார்த்த கண்கள்
குருடாக இருந்திருக்கலாம்..
உன் குழலினிய குரலை கேட்ட செவிகள்
செவிடாக இருந்திருக்கலாம்
உன்னோடு இழைந்து இழைந்து நடந்த கால்கள்
முடமாக இருந்திருக்கலாம்
உன் ஸ்பரிசத்தை விழி மூடி ரசித்த மேனி
வெறும் சடமாக இருந்திருக்கலாம்
இத்தனையும் விட உனைப்பிரிந்த அக்கணமே
நான் பிணமாக விழுந்திருக்கலாம்.








Related Posts with Thumbnails