“குட்டிநாய்க்கும் குழந்தைப்பிளைக்கும் இடம் கொடுக்காதே” இதுதான் எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே ஒரு பழமொழி. எங்கள் மூதாதையர்கள் ஏன் இப்படி எழுதி வைத்தார்கள் என்பதுதான் புரியவில்லை சரி அப்படி இடம் கொடுத்தால் என்ன தான் ஆகும் மடமா போய்விடும்.? இல்லையே.! கொஞ்சம் உங்கள் ஆடைகள் அலங்கோலப்படும், புள்ளை சீச்சா அடிச்சா குளிக்கவேண்டி வரும், ஏதாவது ஒண்ணு ரெண்டு சாமான் உருளும், உடையும்..!! இவற்றை எல்லாம் சரிபண்ணி விடலாம் ஆனால் இரண்டினாலும் கிடைக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் நீங்கள் என்ன விலை கொடுத்தும் வெளியில் பெறமுடியாது .
சின்னஞ்சிறு குழந்தைகளின் மழலைப்பேச்சு, பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. போகும் இடத்தில் வாங்கும் கடுப்பை எல்லாம் வீட்டில் கொண்டுவந்து காட்டும் எங்கள் கனவான் கூட்டதிற்கு ஒரு செல்லப்பிராணி வீட்டில் இருந்தால் மனுசன் வாங்கின கடுப்பை வாசலிலேயே விட்டுட்டு வரும்.நாங்கள் போடுகின்ற மூன்று நேர சாப்பாட்டுக்கும் படுக்க ஒரு இடத்திறகும் அவை காட்டும் அன்பு வேறு எங்கும் கிடையாது. நாய்கள் ஒரு போதும் கடமைக்கு வாலாட்டுவதில்லை எங்களைப்போல..!!
நாய் பூனை ஆடு மாடு தொடங்கி அத்தனை பிராணிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்..!!விசேடமாக நான் பாரத்து ரசிக்கும் ஒருவர் எங்கள் வீட்டு வேப்பமர அணில் பிள்ளை.!! துள்ளித்திரியும் இந்த அணிலாரின் சுறுசுறுப்பு எனக்கு இருந்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்ப்பது உண்டு.அணில்பிள்ளை சாப்பிடும்போது கூட வாலை சும்மா வைத்திருக்காது அங்கே இங்கே ஆட்டிக்கொண்டே சாப்பிடும் அவதானித்து பாருங்களேன். நான் எங்கு சென்றாலும் எந்த அறிமுகமில்லாத பிராணியையும் தொட்டுத்தடவ தவறுவதில்லை.இதில் நாய்கள் பழக கொஞ்சம் காலம் எடுக்கும் என்றாலும் அனேகமாக எனது நணபர்களின் வீட்டு நாய்கள் எல்லாம் சிறிது காலத்தில் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.
செல்லப்பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன.வயோதிப காலத்தில் முதியவர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்க உதவும் இவை அவர்கள் தனிமையாக உணர்வதையும் தடுத்து அவர்களின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு பிடிப்பை ஏறபடுத்துகின்றன. வெளிநாட்டில் இருக்கும் புள்ளைகளை விட ஆடுமாடுகள் இவர்களில் வைத்திருக்கும் அன்பு அதிகம் .
உடல் எடை குறைப்பதற்கு ஏன் ஜிம்முக்கு போகவேண்டும் மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி நாயோடு ஒடி விளையாடியும் கொஞ்ச தூரம் நடந்தும் கூட ஐந்து சதம் செலவளிக்காமல் உடல் எடை குறைக்கலாம்.இதைவிட செல்லப்பிராணிகள் மன அழத்தத்தை குறைப்பதுடன் உயர் குருதி அழுத்த நோயாளிகளுக்கு குருதி அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது அன்பாக ஒரு பிராணியை வளர்ப்பது உயர் குரதி அமுகத்திறகு மாத்திரையை விட சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.இதன்மூலம் தன்னை வளர்பவரின் நீண்ட ஆயுளுக்கு இவை உறுதுணையாக இருப்பது ஆரய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 92பேரில் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்றில் செல்லப்பிராணிகள் எதுவும் வளர்த்திராத 29 பேர்ல் 11 பேர் ஒருவருடத்திலேயே இறந்து போக செல்லப்பிராணிகள் வளர்த்த 52 பேரில் மூன்று பேர்தான் இறந்திருந்தார்கள்.அத்துடன் ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது மார்படைப்பு வருவதற்கான ஆபத்தை இரண்டு சதவீதத்தால் குறைப்பதாக இன்னொரு ஆராய்ச்சியில் சொல்கிறார்கள்.
இப்படி எத்தனையோ அனுகூலங்கள் இருந்தாலும் வெறும் காவலுக்கு மட்டும் நாயும் எலிபுடிக்க மட்டும் பூனையும் வளர்க்கும் கூட்டமும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. மேலை நாடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கசெலாவாகும் தொகையில் ஒரு குடும்பம் நடத்தலாம் என்று கூறுவார்கள் அங்கு இவற்றுக்கு இருக்கும் மரியாதை அந்தளவு..!!! எங்களூரில்…????
இவற்றால் வரும் வில்லங்கங்கள் என்று பார்த்தால் ஒன்று,நாய் பூனை போன்றவற்றின் மயிர்களுக்கு சில பேருக்கு ஒவ்வாமை இருக்கும் இது ஆஸ்த்துமாவை கூட அவர்களுக்கு ஏற்படுத்தும். இதைவிட ஒழுங்கற்ற கவனிப்பால் இவற்றின் (rabiesvirus) வைரஸ் தொற்றுக்குள்ளான உமிழ் நீர் மூலம் பரவும் விசர்நாய்க்கடி என்று சொல்லப்படும் நீர் வெறுப்பு(rabies)நோய், மற்றும் இவற்றில் வளரும் உண்ணிகளின் மூலம் பரவும் தைபஸ் என்ற ஒரு வகை காய்ச்சல் எனபன ஏனைய முக்கியமான சுகாதார பிரச்சனைகள்.ஆனால் இவை இரண்டும் உங்கள் பிராணிகளை சுகாதாரமாக தடுப்பு மருந்து ஏற்றி வளர்த்தால் ஒரு பிரச்சனையே இல்லை.!!(இலங்கையில் தான் இது மிகவும் அதிகம் )உங்களை சந்தோசமாக மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமா வாழ வகை செய்யும் இந்த பிராணிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா.!!
.





