உணர்வுகளை உசுப்பி விடும் ஒரு சில படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது கௌதம் வாசு தேவ மேனனின் சொந்தக்கதை என்று கூறப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா . இன்னும் கொஞ்ச காலத்திற்கு இளைய உள்ளங்களின் காதல் பாடப்புத்தகமாக கட்டாயம் இருக்கும். ஐ ஆம் கிரேசி எபௌட் யு … என்றவாறு பலர் படம் பாரத்து பகற் கனவு கண்டவாறு அடுத்த நாளே புறப்பட்டிருப்பாரகள்… அப்படி ஒரு பாதிப்பு .. யாராவது ஒரு பொண்ணின் பின்னால் லோ..லோ.. என்று சுற்றி நொந்து போனவர்கள் என்றால் ஐயோ.! போச்சு.!! நிச்சயமாக நீண்ட நாளைக்குப்பின் ஒரு நெஞ்சு நிறைந்த வலியை உணர்ந்திருப்பாரகள். இப்படி ஒரு அழகான முழுமையான அற்புதமான படம் பாரத்து எத்தனை நாள் ஆச்சு என்று கூறாதவர்கள் ..இது வரை படம் பாரக்கவில்லை .. தயவு செய்து போய்ப்பாருங்கள்... குறை எதுவும் சொல்ல முடியாதபடி அப்படி ஏதும் இருந்தாலும் ஒரு அழகான பெண்ணின் முகத்தில் இருக்கும் மச்சத்தை மறுவைப்போல அவையும் அழகாகவே தெரிகிறது காரணம்…
கௌதம் மேனனின் திரைக்கதை + வசனம்.
எல்லோரும் எதிர்பாத்ததுதான் கௌதம் மேனனின் திரைக்கதை பற்றி சொல்லவா வேண்டும்..! அமைதியாக நகர்ந்து செல்லும் ஒரு அழகிய நதி போல உள்ளத்தை இழுத்து செல்லும் திரைக்கதையில் இடை வேளைக்கு முதல் சிரிப்பலைகளை சிறவிடுகிறது வசனங்கள்.. கார்த்திக் ஜெசி சந்திக்கும் அத்தனை காதல் காடசிகளிலும் ஆரம்பத்தில் சிரிப்பு தெறிக்கும் … இடை இடையே நச் என்று மனதை தொட்டு செல்லும்.. அற்புதமான வசனங்கள்… காதலர்களுக்கு ஒரு அகராதியே எழுதி இருக்கிறார் கௌதம் மேனன். உணர்வு பூர்வமாக நகர்ந்து செல்லும் கதையின் இறுதியில் பலரை இருக்கையிலிருந்து எழும்ப வைத்து அடடா..! இன்னும் ஒரு பாட்டு இருக்கே என மீண்டும் அமரவைக்கும் அற்புதமான இறுதி முடிவு தமிழ் சினிமாவுக்கு புதிசு..! திகைக்க வைத்த அந்த திருப்பத்தில் அன்பில் அவன் பாடல் போகும் போது நான் சொன்னேன் .. இந்த காதல் கதைக்கு சினிமாவில் தான் இப்படி முடிவு வரும் வியாபாரத்திற்கு.. நிஜத்தில் நிச்சயமாக வேறுமாதிரித்தான் இருக்கும் என்று..! கணக்கு தப்பவில்லை..! கௌதம் மேனன் கதை சினிமா அல்ல நிஜம் என்று கடைசியில் சொல்லி விடுவார்..! விஜய் டிவியின் அடுத்த காப்பி வித் அனு நிகழ்ச்சிக்கு அது யார் என்று கேட்க அனு அக்கா கேள்விகள் தயாரா..??
நல்ல சில பொண்ணுகள் அழகாக இருக்காது பாவம்..!! அழகான சில பொண்ணுகள் நல்லதாக இருக்காது.. அசிங்கம்!! நல்ல பொண்ணு ஒண்ணு ரொம்பவும் அழகாக இருந்தால் எப்படி இருக்கும் ..?? அப்படி இந்த காதல் ஓவியத்திறக்கு தன் கமெராவினால் வண்ணந்தீட்டிய ..
மனோஜ் பரம்ம ஹம்சாவின் ஒளித்தொகுப்பு.
மணிரத்னம் ஷங்கர் மறைந்து போன ஜீவா கௌதம் மேனன் இவர்களின் படங்களில் பாரிய பங்கு ஒளிப்பதிவாளர்களின் கையில் இருக்கும் காட்சிகள் கண்ணை கொள்ளை கொண்டு போகும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் மனோஜ் தன் பங்கை கூடுதலாகவே செய்திருக்கிறார் எந்த காட்சி சிறந்தது என்று சொல்ல முடியாதபடி அத்தனை காட்சிகளும் அவ்வளவு அழகு வெளிச்சத்தை கையாண்ட விதம் அற்புதம் காட்சிகள் அத்தனையும் படந்தான் பார்க்கிறோமா என்ற உண்ர்வை ஏற்படுத்தும் அளவிற்கு இயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் கூடவே சேர்ந்து வரும் அந்தி வான சூரியனும் வண்ண நிலவும் கூடுதல் அழகு. குறிப்பாக மன்னிப்பாயா பாடல் காட்சி அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் மிக அற்புதமாக படம் ஆக்கப்பட்டிருக்கும் காட்சிகள் உண்மையிலேயே ஒரு முழு நிலா வெளிச்சத்தில் தான் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ..? ஒருவர் தயார் ..! பாலு மகேந்திரா பி.சி.சிறீராம் கே.வி.ஆனந்த் ரவி.கே.சந்திரன் போன்ற தமிழ் சினிமா தந்த சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியிலில் சேர்ந்து கொள்ள… ஒரு கணம் கூட தவற விடாதபடி வாங்கிய பெப்சியை குடிக்காமல் நான் கண்களால் காட்சிகளை விழுங்கி கொண்டிருக்க பக்கத்திலிருந்த நண்பன் அதை விழுங்கியிருந்தான்.! இடைவேளையில் எனக்கு வெறும்போத்தல் தான்…:-(
இத்தனை ஜாலங்களும் சேர்ந்தும் ஒருவரை ஒதுக்க முடியவில்லை !! முடியுமா..!! என்ன..??
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலம்.
கௌதம் மேனனின் குட்டி குட்டி வார்த்தைகளில் வராத உண்ர்வுகளை இசையால் வடித்திருக்கிறார் ரஹ்மான் அடிக்கடி பின்னணியில வரும் ஆரோமலே மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இடையிடையே மீண்டும் ஒலிக்காதா என எண்ண வைக்கும் சின்னஞ்சிறு மெட்டுக்கள் என மனதை கட்டிப்போடும் இசை. அந்த காரத்திக் ஜெசி இறுதி காதல் சந்திப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையே சொல்லும் சகுனம் சரியில்லை..! என்று. வழமை போலவே கௌதமின் கதையின் ஓட்டத்தினோடு பாடல்கள் திரைக்கதையில், படம் பார்ப்பவர்களின் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளின் ஒலியாக வருகிறது. ஏ.ஆர் தப்பாமல் மெட்டுப்போட்டிருக்கிறார்.. தாமரையும் கதைக்கு ஏற்றாற்போல் வரிகள் பின்னி இருக்கிறார்.. ஆனால்….
ஆன்டனி..
என்னமோ இந்த முறை கதையின் சீரான ஓட்டத்தில் ஓரங்கட்டப்படிருக்கிறார் அனேகமாக இவரது கைவண்ணம் படங்களில் பிறம்பாக தெரியும் இங்கு இவரது உழைப்பு வெளியில் தெரியாத அளவுக்கு அல்லது அப்படி தெரியாதது போல சீராக படம் தொகுக்கப்பட்டிருக்கிறது பாடல் காட்சிகள் இன்னும் ஒருமுறை பார்த்தால் தான் இவரது கலையை கண்டு பிடிக்கலாம்.
கௌதமின் சரளமான திரைக்கதை வசனங்கள்,மனோஜின் காட்சிப்படையல் எல்லாவற்றையும் மீறி காதுகளை தாலாட்டும் ரஹ்மானின் இசை எல்லாம் சேர்ந்த ஒரு பாரிய பந்தியில் தொட்டுக்கொள்ள சிம்புவும் த்ரிசாவும் குறை வைக்காமல நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக அந்த அமெரிக்காவில் இருவரும் சந்திக்கும் காடசி. இருவருடைய உடையலங்காரமும் இயல்பாக இருப்பதும் ஒரு அழகு. வழமை போல கௌதமின் படங்களில் கதாநாயகிகள் சேலையில் தான் உலாவருவார்கள் இங்கேயும்தான் த்ரிசா அழகாக தெரிகிறார். சிம்புவுக்கு நண்பராக வரும் அவர் கூட நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். என் நண்பன் ஒருவன் சொன்னான் உதவி இயக்குனராக வரும் அந்த பொண்ணு கூட அழகா இருக்குன்னு ..!! இன்னும் நான் குறிப்பிட மறந்து போன எத்தனை பேரோ எல்லோருமாக சேர்ந்து என் வாழ்நாளில் ஒரு சிறந்த படம் ஒன்றை பார்க்கவைத்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல பார்த்த எல்லோரும் இதுதான் சொல்கிறார்கள். ஆனால் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அலைபாயுதே படத்தை அசைக்க முடியவில்லை . ஏனோ தெரியாது மணிரத்னம் என்னும் குருவை மிஞ்ச சீடனால் முடியவில்லை. அலைபாயுதே படம் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருக்கும். என்ன இருந்தாலும் இந்த காலத்து பசங்களுக்கு இதுதான் …
இது வரையும் யாராவது காதலிக்காமல் இருந்தால் படத்தை பாருங்க..!
வேலை இல்லாம இருக்கீங்களா..??
அடுத்த நாளே யாரோ ஒரு பொண்ணு பின்னால கிளம்பிடுங்க…!
அந்த இனிமையான வலியை அனுபவிக்காத வாழ்க்கை குப்பையோ என்று தோன்றுகிறது ..?
பட்.. ஐ கான்ட்..…
.